Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

Apr 21, 2015

மனு வரையுங்கலை!

பதினைந்தாயிரம்
முப்பதாயிரம்
நாற்பதாயிரம்
முப்பதாயிரம்
அறுபதாயிரம்
இருபத்தஞ்சாயிரம் (இது, அவர்களே அழைத்துக் கொடுத்தது)
எழுபதாயிரம்
ஆமாம், இது மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நிதியுதவி எழுபதாயிரத்தோடு, இவ்வருடத்தில் வெளிவர உள்ள ஏழாவது பொதுவுடைமை நூலாகும்.
கடந்த 09-10-2014 அன்று தலைநகர் தில்லியிலுள்ள மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்திற்கு நேரில் சென்று, ஆறாவது நூலாக வெளிவந்துள்ள ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூல் அதுவரை வெளிவராமல் இருப்பதற்கு போதிய நிதியின்மைதான் காரணம் என்றும், எனவே இனி வரும் காலங்களில் கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டுமெனவும் கோரிக்கை வைத்தேன்.
ஆனால், எனது கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டவர்கள், மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, மிகக்குறைந்த நிதியை மட்டுமே ஒதுக்கும் நிலை உள்ளதாக தெரிவித்துவிட்டு, உங்களின் முயற்சிக்கு எங்களால் இயன்ற நிதியை ஒதுக்கீடு செய்கிறோம் எனவும் உறுதியளித்திருந்தனர்.

அதன்படியே, ஒதுக்கப்பட்ட குறைந்த நிதியில், அதிகபட்ச நிதியாக ரூபாய் எழுபதாயிரத்தை ‘மனு வரையுங்கலை!’நூலுக்காக நமக்கு ஒதுக்கியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களான உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் நம்பிக்கையோடு வாக்குறுதி கொடுத்ததற்கும், அதனை நிறைவேற்றியதற்கும் அடிப்படைக் காரணம், ‘‘அந்நூலுக்கு அதுவரையினான வாசகர்களின் நிதிப்பங்களிப்பு பட்டியலை காண்பித்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நூலை வெளியிட்டு, அதன் பிரதிகளை அனுப்பி வைப்பதாக, நானும் உறுதிகூறி, அதன்படியே அனுப்பி வைத்ததேயாகும்’’.
ஆகையால், இதன் பெருமையனைத்தும், தேவையான நிதியுதவியை அளித்த உங்களையேச் சேரும்! இந்நூலுக்கு 19-01-2015 அன்று தினமணி நாளிதழ் வழங்கியுள்ள மதிப்புரையை இங்கு சொடுக்கி படிக்கலாம்.
பொதுவாக தங்களின் வாழ்வாதாரம் என்னவென்பது தெரியாமலேயே, ஒவ்வொரு நூலுக்கும் உங்களின் பங்களிப்பை கோருகின்றோம். அதன்படியே, இம்மனு வரையுங்கலை நூலுக்கும் உங்களின் பங்களிப்பைக் கோருகிறோம். இவ்விடத்தில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம், நமக்கு கொடுக்கும் நிதி எவ்வளவோ, அதற்கு எவ்வளவு நூலை வெளியிட முடியுமோ, அதனை வெளியிட்டாலே போதும். ஆனால், அந்நூல்கள் நாம் கொடுக்க விரும்பும் அனைத்து இடங்களுக்கும் போதுமானதாக இருக்காது என்பதை தாங்களும் நன்கு அறிவீர்கள்.
உங்களின் பங்களிப்பின் மூலமே, இந்நூல் வழக்கம்போலவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள அனைத்துப் பொது நூலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு சென்று சேரும் என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
நமது சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம் எப்படி தன் பங்களிப்பைக் கடமையாக கொடுக்கிறதோ, அப்படியே நாமும் நம் பங்களிப்பைச் செய்வது நமது கடமையாகும்.  
எனவே, பங்களிப்பு செய்ய விருப்பம் உள்ளவர்கள் அதுபற்றிய விருப்பத்தை தெரிவிக்கலாம். நிதிப்பங்களிப்பைச் செய்ய விரும்புபவர்கள் ஆகஸ்ட் 2015 க்குள் (இந்நூலை செப்டம்பர் 2015க்குள் வெளியிட வேண்டிய கட்டாயம் இருப்பதால்)
Account Name :  CARE Society
Account Number :  768307417
Account Type :  Saving Bank Account
IFSC code   :  IDIB000H011
Bank Name   :  Indian Bank, Hosur – 635109
என்கிற வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, உங்களின் பங்களிப்பை கணக்கில் வரவு வைக்க ஏதுவாக பணஞ்செலுத்திய விபரத்தை திரு. அய்யப்பன் 9842909190, 9150109189, திரு. நடராஜ் 9842399880, திரு. சரவணன் 9789488105 ஆகிய ஏதோவொரு உலாப்பேசி எண்களில் ஏதாவது ஒன்றிலும்
மற்றும்
caresociety.org@gmail.com & warrantbalaw@gmail.com  என்கிற மின்னஞ்சல் முகவரிகளில், மின்னஞ்சல் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் அஞ்சலட்டை மூலம்  தகவலைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலுக்கு பங்களிப்புத் தொகை தருவதாக உறுதியளித்ததன் பேரில், அந்நூலின் பட்டியலில் இடம்பெற்று, இதுவரையிலும் அப்பங்களிப்புத் தொகையைச் செலுத்தாதவர்கள் உடனே செலுத்திவிட்டு தகவலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பங்களிப்புப் பட்டியலில் எப்படியும் தம் பெயர் இடம் பெற்றுவிட வேண்டும் என்கிற ஆசையில், வாக்குறுதி அளித்தபடி பங்களிப்புத் தொகையைத் தராமல் இனியும் ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்நூலில், அனைத்து வகையான பிரச்சினைகளையும், எளிதில் எதிர்கொள்களும் விதமாக பொய்யர்களைப் போல் அல்லாமல், தத்தமது தொணியில் குற்றவியல் மற்றும் உரிமையியல் சார்ந்த சட்டப்பூர்வ அறிவிப்பு, பதில் அறிவிப்பு, பிரமாணப்பத்திரம், இடைமனுக்கள், அசல் அல்லது பிணை அல்லது சீராய்வு அல்லது மேல்முறையீட்டு மனு தயார் செய்தல், கேவியட், தடையுத்தரவு, நீதிப்பேராணை (ரிட்) ஆகியவை குறித்து விரிவாக விளக்கியும், இதுவரை நான் தயார் செய்த அனைத்து மனுக்களையும் தொகுத்தளிக்க உள்ளேன்.
இதில், நீதியைத்தேடி… மற்றும் கடமையைச் செய்! பலன் கிடைக்கும் ஆகிய நூல்களில் இல்லாத, உங்களுக்குத் தேவையான அடிப்படை சட்டங்குறித்த சந்தேகங்களைச் சொன்னால், அதையுஞ்சேர்த்து எழுத வசதியாய் இருக்கும்.

மனு வரையுங்கலை!

பதினைந்தாயிரம்
முப்பதாயிரம்
நாற்பதாயிரம்
முப்பதாயிரம்
அறுபதாயிரம்
இருபத்தஞ்சாயிரம் (இது, அவர்களே அழைத்துக் கொடுத்தது)
எழுபதாயிரம்
ஆமாம், இது மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நிதியுதவி எழுபதாயிரத்தோடு, இவ்வருடத்தில் வெளிவர உள்ள ஏழாவது பொதுவுடைமை நூலாகும்.
கடந்த 09-10-2014 அன்று தலைநகர் தில்லியிலுள்ள மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்திற்கு நேரில் சென்று, ஆறாவது நூலாக வெளிவந்துள்ள ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூல் அதுவரை வெளிவராமல் இருப்பதற்கு போதிய நிதியின்மைதான் காரணம் என்றும், எனவே இனி வரும் காலங்களில் கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டுமெனவும் கோரிக்கை வைத்தேன்.
ஆனால், எனது கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டவர்கள், மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, மிகக்குறைந்த நிதியை மட்டுமே ஒதுக்கும் நிலை உள்ளதாக தெரிவித்துவிட்டு, உங்களின் முயற்சிக்கு எங்களால் இயன்ற நிதியை ஒதுக்கீடு செய்கிறோம் எனவும் உறுதியளித்திருந்தனர்.

அதன்படியே, ஒதுக்கப்பட்ட குறைந்த நிதியில், அதிகபட்ச நிதியாக ரூபாய் எழுபதாயிரத்தை ‘மனு வரையுங்கலை!’நூலுக்காக நமக்கு ஒதுக்கியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களான உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் நம்பிக்கையோடு வாக்குறுதி கொடுத்ததற்கும், அதனை நிறைவேற்றியதற்கும் அடிப்படைக் காரணம், ‘‘அந்நூலுக்கு அதுவரையினான வாசகர்களின் நிதிப்பங்களிப்பு பட்டியலை காண்பித்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நூலை வெளியிட்டு, அதன் பிரதிகளை அனுப்பி வைப்பதாக, நானும் உறுதிகூறி, அதன்படியே அனுப்பி வைத்ததேயாகும்’’.
ஆகையால், இதன் பெருமையனைத்தும், தேவையான நிதியுதவியை அளித்த உங்களையேச் சேரும்! இந்நூலுக்கு 19-01-2015 அன்று தினமணி நாளிதழ் வழங்கியுள்ள மதிப்புரையை இங்கு சொடுக்கி படிக்கலாம்.
பொதுவாக தங்களின் வாழ்வாதாரம் என்னவென்பது தெரியாமலேயே, ஒவ்வொரு நூலுக்கும் உங்களின் பங்களிப்பை கோருகின்றோம். அதன்படியே, இம்மனு வரையுங்கலை நூலுக்கும் உங்களின் பங்களிப்பைக் கோருகிறோம். இவ்விடத்தில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம், நமக்கு கொடுக்கும் நிதி எவ்வளவோ, அதற்கு எவ்வளவு நூலை வெளியிட முடியுமோ, அதனை வெளியிட்டாலே போதும். ஆனால், அந்நூல்கள் நாம் கொடுக்க விரும்பும் அனைத்து இடங்களுக்கும் போதுமானதாக இருக்காது என்பதை தாங்களும் நன்கு அறிவீர்கள்.
உங்களின் பங்களிப்பின் மூலமே, இந்நூல் வழக்கம்போலவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள அனைத்துப் பொது நூலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு சென்று சேரும் என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
நமது சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம் எப்படி தன் பங்களிப்பைக் கடமையாக கொடுக்கிறதோ, அப்படியே நாமும் நம் பங்களிப்பைச் செய்வது நமது கடமையாகும்.  
எனவே, பங்களிப்பு செய்ய விருப்பம் உள்ளவர்கள் அதுபற்றிய விருப்பத்தை தெரிவிக்கலாம். நிதிப்பங்களிப்பைச் செய்ய விரும்புபவர்கள் ஆகஸ்ட் 2015 க்குள் (இந்நூலை செப்டம்பர் 2015க்குள் வெளியிட வேண்டிய கட்டாயம் இருப்பதால்)
Account Name :  CARE Society
Account Number :  768307417
Account Type :  Saving Bank Account
IFSC code   :  IDIB000H011
Bank Name   :  Indian Bank, Hosur – 635109
என்கிற வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, உங்களின் பங்களிப்பை கணக்கில் வரவு வைக்க ஏதுவாக பணஞ்செலுத்திய விபரத்தை திரு. அய்யப்பன் 9842909190, 9150109189, திரு. நடராஜ் 9842399880, திரு. சரவணன் 9789488105 ஆகிய ஏதோவொரு உலாப்பேசி எண்களில் ஏதாவது ஒன்றிலும்
மற்றும்
caresociety.org@gmail.com & warrantbalaw@gmail.com  என்கிற மின்னஞ்சல் முகவரிகளில், மின்னஞ்சல் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் அஞ்சலட்டை மூலம்  தகவலைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலுக்கு பங்களிப்புத் தொகை தருவதாக உறுதியளித்ததன் பேரில், அந்நூலின் பட்டியலில் இடம்பெற்று, இதுவரையிலும் அப்பங்களிப்புத் தொகையைச் செலுத்தாதவர்கள் உடனே செலுத்திவிட்டு தகவலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பங்களிப்புப் பட்டியலில் எப்படியும் தம் பெயர் இடம் பெற்றுவிட வேண்டும் என்கிற ஆசையில், வாக்குறுதி அளித்தபடி பங்களிப்புத் தொகையைத் தராமல் இனியும் ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்நூலில், அனைத்து வகையான பிரச்சினைகளையும், எளிதில் எதிர்கொள்களும் விதமாக பொய்யர்களைப் போல் அல்லாமல், தத்தமது தொணியில் குற்றவியல் மற்றும் உரிமையியல் சார்ந்த சட்டப்பூர்வ அறிவிப்பு, பதில் அறிவிப்பு, பிரமாணப்பத்திரம், இடைமனுக்கள், அசல் அல்லது பிணை அல்லது சீராய்வு அல்லது மேல்முறையீட்டு மனு தயார் செய்தல், கேவியட், தடையுத்தரவு, நீதிப்பேராணை (ரிட்) ஆகியவை குறித்து விரிவாக விளக்கியும், இதுவரை நான் தயார் செய்த அனைத்து மனுக்களையும் தொகுத்தளிக்க உள்ளேன்.
இதில், நீதியைத்தேடி… மற்றும் கடமையைச் செய்! பலன் கிடைக்கும் ஆகிய நூல்களில் இல்லாத, உங்களுக்குத் தேவையான அடிப்படை சட்டங்குறித்த சந்தேகங்களைச் சொன்னால், அதையுஞ்சேர்த்து எழுத வசதியாய் இருக்கும்.

Apr 18, 2015

பாரிஸ்டரானேன். ஆனால் பிறகு…..?


Mahatma Gandhiபொய்யர்களின் தொழிலை ஒழிப்பது எப்படி என்கிற எனது சட்ட ஆராய்ச்சிக் கடமைப்பணியின் எட்டாவது வருடத்தில், பொய்யர்களின் தொழிலானது விபச்சாரத்திற்கு இணையானது என்கிற மகாத்மாவின் தத்துவக் கருத்தை இந்திய தன்னாட்சி நூலில் படிக்க நேர்ந்தது.
அதன் இறுதிப்பகுதியில்,‘‘இவ்விபச்சாரிகளின் (பொய்யர்களின்) தொழில் எப்படி வளர்ந்து என்பது குறித்து, நீங்கள் மிகச்சரியாக தெரிந்து கொண்டால், அத்தொழில் குறித்து எனக்கிருக்கும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்’’ என குறிப்பிட்டு இருப்பார்.
அப்படியானால், நிச்சயமாக மிகக்கேவலமானதொரு முறையில் தாம், அத்தொழில் வளர்ந்திருக்க வேண்டுமென்பதும், இப்படி வளர்ந்த தொழில் ஒருபோதும் உத்தமமாக விளக்க முடியாது என்பதும் திண்ணம். இதனால்தாம், நான் பொய்த்தொழிலுக்கோ அல்லது நிதிபதி தொழிலுக்கோ முயற்சிக்காமல், உங்களுக்கு போதித்துக் கொண்டிருக்கிறேன்.
இதைத்தாம், நான் வேறு வகைகளில் நீதியைத்தேடி… நூல்களிலும் குறிப்பிட்டு உள்ளேன்.
இதுபுரியாத பலரும், ஒரு பக்க மனுவையோ, தீர்ப்பையோ கூட சரியாக எழுதத்தெரியாதவர்கள் பொய்யர்களாக, நிதிபதிகளாக பொருளீட்டிக் கொண்டிருக்க, நீங்களோ புத்தகத்தை கூட பொதுவுடைமையென அறிவித்து விட்டு, பொருளீட்டாமல் இருக்கிறீர்களே என ஆதங்கப்படுவார்கள்.
சரி, நம்ம விசயத்துக்கு வருவோம். ஆனாலுங்கூட, காந்தி அப்பொய்த்தொழில் எப்படி வளர்ந்தது என விரிவாக சொல்லாமல் விட்டுவிட்டாரே என்கிற ஆதங்கம் ஒருபுறமென்றால், மறுபுறமோ வேறு எதிலும் எழுதாமலா போயிருப்பார் என்கிற சந்தேகம் வேறு.
சரி, நமக்கு தெரிய அவர் இறுதியாக எழுதிய புத்தகம் சத்தியசோதனைதாம். எனவே, இதுபற்றி அந்நூலில் எதாவது எழுதியிருக்கிறாரா என பார்த்துவிடுவோம் என, அந்நூலைப் பிரித்தால் வந்த பக்கமே, ‘‘பாரிஸ்டர் ஆனேன். ஆனால் பிறகு….?’’ என்கிற தலைப்புதாம்.
நீதியைத்தேடி… சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் நூலில், காந்தி பொய்த்தொழிலில்கூட, மெய்யாக எப்படி நடந்துகொண்டார் என்பதனை சத்திய சோதனையில் இருந்துதாம் தொகுத்து அளித்தேன். இதனை பலரும் வரவேற்றார்கள். இதற்காக அச்சத்தியசோதனை முழுவதையும் படிக்க நேர்ந்திருக்கும் என நீங்கள் நினைத்தால், அது மாபெரும் தவறு.
ஆமாம், நான் எதார்த்மாக திருப்பிய பக்கங்களில் கிடைத்த தகவல்களைத்தாம் தொகுத்தளித்துள்ளேன். ஆகையால், காந்தி இப்பொய்த்தொழிலை வெறுக்குமளவிற்கு, ஆங்கிலேய அரசாங்கம் சட்டப்படிப்பு படித்தோருக்கு மது பானங்கள் உள்ளிட்டவைகளை வழங்கியது என்பதை என்பதையெல்லாம், சத்திய சோதனையில்தாம் சொல்லியிருப்பார் என்பது தெரியாமலே போயிற்று.
இதோ, உங்களுக்காக மகாத்மாவின் சத்திய சோதனையில், பாரிஸ்டரானேன். ஆனால் பிறகு…..? பகுதியில் இருந்து…
பாரிஸ்டர் ஆவதற்காகவே நான் இங்கிலாந்துக்குச் சென்றேன். ஆனால், அதைப்பற்றி இதுவரை ஒன்றும் சொல்லாமலேயே தள்ளிவைத்து வந்திருக்கிறேன். அதைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய சமயம் வந்துவிட்டது.
ஒரு மாணவன், பாரிஸ்டர் ஆவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் இரண்டு உண்டு. இதில் ஒன்று, ‘முறையை அனுசரிப்பது’ இத்தகைய பன்னிரெண்டு முறைகள் சுமார் மூன்று ஆண்டுகளுக்குச் சமம். மற்றொன்று, ‘பரீட்சைகளில் தேறுவது’.
‘முறையை அனுசரிப்பது’ என்றால், முறைப்படி தின்பது;
அதாவது ஒரு கால அளவில் நடக்கும் சுமார் இருபத்து நான்கு விருந்துகளில் குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது போக வேண்டும். விருந்தில் கலந்து கொள்ளுவதென்றால், சாப்பிட்டாக வேண்டும் என்பது அல்ல.
குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டு, விருந்து முடியும்வரை அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்கள்; குடித்தார்கள். நல்ல உணவு வகைகளும், உயர்ந்த மதுபானங்களும் அங்கே வழங்கப்படும்.
ஒரு சாப்பாட்டுக்கு இரண்டரை ஷில்லிங்கிலிருந்து மூன்றரை ஷில்லிங் வரையில் ஆகும்: அதாவது இரண்டு, மூன்று ரூபாய் ஆகும். ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டால் மதுபானத்திற்கு மாத்திரம் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டி வரும். ஆகையால், இது தமானது என்றே கருதப்பட்டது.
சாப்பாட்டின் விலையைவிட மதுபானச் செலவு அதிகமாவது என்பது இந்தியாவிலுள்ள நமக்கு -நாம் ‘நாகரிகம்’ அடையாதவர்களாக இருந்தால் ஆச்சரியமாக இருக்கும். முதன் முதலாக எனக்கு இந்த விவரம் தெரிந்தபோது நான் திடுக்கிட்டே போனேன். குடியில் இவ்வளவு பணத்தை வாரி இறைத்துவிட அவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறது என்று ஆச்சரியப்பட்டேன்.
பிறகு நான் இதைப் புரிந்து கொண்டேன். இந்த விருந்துகளில் அநேகமாக நான் எதுவும் சாப்பிடுவதில்லை. ஏனென்றால், நான் சாப்பிடக்கூடியவை ரொட்டியும் வேக வைத்த உருளைக் கிழங்கும், முட்டைக் கோஸூமே. இவையும் எனக்குப் பிடிப்பதில்லையாகையால் ஆரம்பத்தில் இவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. பின்னால் இவை எனக்கு ருசியாயிருக்க ஆரம்பித்ததும், வேறு பண்டங்களும் வேண்டும் என்று கேட்கும் துணிச்சலும் எனக்கு உண்டாயிற்று.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தைவிட, நீதிபதிகளுக்கு அளிக்கும் விருந்து மிகவும் உயர்ந்ததாக இருக்கும். என்னைப்போல ஒரு பார்ஸி மாணவரும் மாமிசம் சாப்பிடாதவர். நீதிபதிகளுக்குப் பரிமாறும் சைவ உணவு வகைகளை எங்களுக்கும் பரிமாறவேண்டும் என்று நாங்கள் இருவரும் மனுச்செய்து கொண்டோம். எங்கள் மனு அங்கீகரிக்கப் பெற்றது, நீதிபதிகளின் மேஜைகளிலிருந்து பழங்களும் மற்றக் கறிகாய்களும் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கின.
நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவிற்கு, இரண்டு பாட்டில் ‘ஒயின்’ என்ற வகையில் மதுபானம் கொடுத்தனர். நான் அதைத்தொடுவதே இல்லை. ஆகையால், என்னுடன் இருக்கும் மற்ற மூவருக்கு இரண்டு ‘ஒயின்’ பாட்டில்களைக் காலி செய்ய வசதி இருந்தது.
இதற்காக என்னைத் தத்தம் குழுவில் சேர்த்துக் கொள்ளுவதற்குப் பலர் விரும்பியதால், எனக்கு எப்பொழுதும் கிராக்கி இருந்து வந்தது. ஒவ்வொரு காலப் பகுதியிலும் இந்த நிகழ்ச்சியில் ‘பெரிய விருந்து’ என்று ஒன்று நடக்கும்.
‘போர்ட்’, ‘ஷெர்ரி’ ஒயின்களும் அதிகமாக, ‘ஷாம்பேன்’ போன்ற ஒயின்களும் கொடுக்கப்படும். ஆகையால், அதற்கு வருமாறு எனக்கு விசேஷக் கோரிக்கைகள் வரும். அந்தப்பெரிய விருந்து நாட்களில் எனக்குக் கிராக்கி வெகு அதிகம் இருக்கும்.
இத்தகைய விருந்துகள், பாரிஸ்டராவதற்கு மாணவர்களை எவ்விதம் தகுதியுடையவர்கள் ஆக்குகின்றன என்பதை நான் அப்பொழுதும் உணரவில்லை; அதற்குப் பின்னரும் உணரவில்லை. மிகச்சில மாணவரே இத்தகைய விருந்துகளில் கலந்துகொள்ளும் காலம் ஒன்று இருந்தது. அப்பொழுது அம்மாணவர்களும் நீதிபதிகளும் கலந்து பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் இருந்தன; பிரசங்கங்களும் நடந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களினால் அவர்களுக்கு உலக ஞானத்துடன், ஒருவகையான மெருகும் நாகரிகமும் உண்டாவதற்கும் வசதி இருந்தது; பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொள்ளமுடியும்.
என் காலத்திலோ, நீதிபதிகளுக்கு என்று தனியாகவே விருந்து மேஜைகள் போடப் பட்டிருந்ததால் அத்தகைய வாய்ப்பு என்றுமே எனக்குக் கிடைக்கவில்லை. இந்த வழக்கத்திற்கு நாளா வட்டத்தில் பொருள் இல்லாமலே போயிற்று. என்றாலும், பழைமையில் பற்றுக் கொண்ட இங்கிலாந்து, அதை விடாமல் வைத்துக் கொண்டிருந்தது.
பரீட்சைக்கு உரிய பாடங்கள் மிகச் சுலபமானவை. பாரிஸ்டர்களை, ‘விருந்து பாரிஸ்டர்கள்’ என்றும் வேடிக்கையாக அழைப்பது உண்டு. உண்மையில் பரீட்சைகள் ஒரு பயனும் இல்லாதவை என்பது எல்லோருக்கும் தெரியும்.
என் காலத்தில் ரோமன் சட்டப்பரீட்சை, பொதுச் சட்டப்பரீட்சை என்ற இரு பரீட்சைகள் உண்டு. இவற்றிற்கு இன்னவை பாடப்புத்தகங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. தனித்தனிப் பகுதிகளுக்கும் பரீட்சை எழுதலாம்.
அப்பாடப் புத்தகங்களை யாரும் அநேகமாக படிப்பதே இல்லை. இரண்டே வாரங்களில் ரோமன் சட்டத்திற்குப் போட்டிருக்கும் குறிப்புக்களை மாத்திரம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, ரோமன் சட்டப்பரீட்சையில் பலர் தேறிவிட்டதை நான் அறிவேன்.
அதேபோலப் பொதுச் சட்டத்திற்குள்ள குறிப்புக்களை மாத்திரம் இரண்டு மூன்று மாதங்களில் படித்து விட்டு, அப்பரீட்சையிலும் தேறி விடுவார்கள். கேள்விகள் சுலபமானவை; மாணவர்கள் அளிக்கும் பதில்களுக்கு மார்க் கொடுப்பவர்களும் தாராளமாக நடந்து கொண்டார்கள்.
ரோமன் சட்டப் பரீட்சைக்குச் செல்பவர்களில் 100-க்கு 95 முதல் 99 வரையில் தேறிவிடுவர். முடிவான பரீட்சையிலும் 100-க்கு 75 அல்லது அதற்கு அதிகானவர்கள் கூடத் தேறி விடுவார்கள். ஆகையால் பரீட்சையில் தேறாமல் போய்விடுவோமோ என்ற பயமே இல்லை. பரீட்சைகளும் ஆண்டுக்கு ஒரு முறை அல்ல, நான்கு முறைகள் நடந்தன! இதில் கஷ்டம் இருப்பதாகவே யாரும் நினைப்பதற்கில்லை.
ஆனால், நான் மாத்திரம் அவற்றைச் சிரமமானவையாகச் செய்துகொண்டு விட்டேன். பாடப் புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று கருதினேன். அவைகளைப் படிக்காமல் இருந்துவிடுவது ஒரு மோசடி என்று எண்ணினேன். அவைகளை வாங்குவதில் அதிகப்பணமும் செலவிட்டேன்…
நான் என்னதான் படித்திருந்தேனாயினும், எனக்குள் இருந்த பயத்திற்கும், சக்தியற்றிருக்கிறேன் என்ற உணர்ச்சிக்கும் முடிவே இல்லை. வக்கீல் தொழிலை நடத்துவதற்குத் தகுதி பெற்று விட்டதாக நான் உணரவே இல்லை. எனது இந்தச் சக்தியின்மையைப் பற்றி விவரிக்க ஒரு தனி அத்தியாயமே வேண்டும் என்று கூறும் காந்தி, எனது சக்தியின்மை என்கிற அத்தியாயத்தில்…
பாரிஸ்டர் ஆகிவிடுவது எளிதாகவே இருந்தது. ஆனால், பாரிஸ்டர் தொழிலை நடத்துவதுதான் மிகக் கஷ்டமாக இருந்தது. நான் சட்டங்களைப் படித்திருந்தேன். ஆனால், சட்டவாதம் செய்யும் முறையைக் கற்றுக்கொள்ளவில்லை. சட்டக் கோட்பாகளையெல்லாம் சிரத்தையுடன் படித்திருந்தேன். அவற்றை என் தொழிலில் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளுவது என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை.
‘மற்றவர்களின் சொத்துக்களுக்குக் கெடுதல் ஏற்படாத வகையில் உன் சொத்தைப் பயன்படுத்திக்கொள்’ என்பது அத்தகைய கோட்பாடுகளில் ஒன்று. ஆனால், ஒரு கட்சிகாரரின் நலனுக்கு ஏற்றவாறு இந்தக் கோட்பாட்டை எப்படிப் பயன்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தக் கோட்பாட்டின் மேல் எழுந்த முக்கியமான பெரிய வழக்குகளின் விவரங்களையெல்லாம் படித்துப் பார்த்தேன். என்றாலும், வழக்குகளில் அதை அனுசரிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை.
இதுவல்லாமல், இந்தியச் சட்டத்தைக் குறித்து நான் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லை. ஹிந்து, முகமதியச் சட்டங்களைப் பற்றியோ எனக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு பிராதைத் தயாரிப்பது எப்படி என்பதையும் நான் தெரிந்து கொள்ளவில்லை. எனவே, திக்குத்திசை தெரியாமல் தவித்தேன்…. என விவரிக்கிறார்.
ஆனானப்பட்ட காந்தியே இப்படித்தான் இருந்திருக்கிறார் என்பது, தனக்குதானே வாதாட நினைக்கும் உங்களுக்கு ஊக்கமாக இருக்கவேண்டும். பொய்யர்களின் தொழில் கூட காந்தி ஏன் உத்தமராக விளங்கினார் என்பது இப்போது விளங்கியிருக்கும்.
மாணவர்களை போதைக்கு அடிமைப்படுத்தி பொய்யர்களின் தொழிலை வளர்த்திருக்கிறார்கள் என்பதோடு, படிக்கும் போதே, மாணவர்களை நிதிபதிகளுடன் சேர்ந்து மது குடிக்க பழக்கிவிட்டு, இடைத்தரகர்களாக செயல்படுவதற்கு வழிவகுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், எப்படி கூட்டிக்கழித்து பார்த்தாலும், பொய்யர்களின் தொழில் மேம்படவோ அல்லது உத்தமமாக விளங்கவோ இனியொரு போதும் வாய்ப்பில்லை என்பதோடு, வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! என்று நான் முன் மொழிந்துள்ள தத்துவம், உலகம் உள்ளவரை பொய்க்காது.

கயமையாளர்களாகும் கடமையாளர்கள்!

இவர் மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில், ஆதரவற்று தெருவில் கிடக்கும் நபர்களுக்கு உணவு வழங்கி வந்தவர். உணவு வழங்குவது ஒகே. ஆனால், அதற்கு முன்பாக அவர்களின் காலை தொட்டு கும்பிடுவது உள்ளிட்ட அனைத்து பில்டப்பும் தேவையற்றது என நம்பினேன்.
அதெல்லாம் எதற்காக (உன்னை கொல்லப்போகும் பாவத்திற்காக என்னை மன்னித்துவிடு) என்பது இப்போது புரிந்துவிட்டது.
சாலையோரங்களில் வசித்தபோது கூட இறக்காத அளவிற்கு, ஆசிரமத்தில் ஒரு மாதத்திற்கு இவ்வளவுபேர் இறந்தால், அது எப்படி ஆதரவற்றோருக்கு உணவளிப்பதும், இறப்பதும் ஆகும். அப்பெண் சொல்வதுபோல, கொலைதானே என்கிற சந்தேகம் எழாமலில்லை.
இப்படி துணிந்து குற்றம் புரிபவர்களுக்கு பின்னால், யாரோவொரு உயர்மட்ட அரசூழியர் இருப்பார் என்பது மட்டும் உறுதி! 2010 ஆம் ஆண்டில், இவரை சி.என்.என் நிறுவனம் கதாநாயகனக தேர்ந்தெடுத்தது. இவர் விக்கிபீடியாவில் வேறு இடம் பிடித்துவிட்டார்.
நக்கீரனலிருந்து ……
உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல், பிறந்த மேனியோடு, கதறியபடி ஓடி வந்த அந்த இளம்பெண்ணை முதலில் பார்த்தவர்கள் நூறு நாள் வேலை செய்யும் பெண்கள்தான்.
அக்ஷயா ஆசிரமத்தின் காம்பவுண்டின் சுவரை எகிறிக்குதித்து ஓடி வந்ததை அவர்கள் பார்த்தார்கள்.. ‘‘நான் மெண்டல் இல்லை. மத்த பொண்ணுங்களை கொலை செஞ்ச மாதிரி என்னையும் சாகடிக்கிறதுக்கு டைம் பிக்ஸ் பண்ணிட்டாங்க. ப்ளீஸ் அக்கா..அம்மா.. என்னைக் காப்பாத்தி ஒங்க வீட்டுக்கு கூட்டிப் போங்க.”
“இந்தாம்மா.. முதல்ல இதை உடம்புல சுத்திக்க” தங்கள் தலையில் சுற்றியிருந்த சாயத் துண்டுகளை அந்த இளம் பெண்ணுக்கு கொடுத்து நிர்வாணத்தை மறைக்க வைத்தார் கள், அன்றைய வேலை முடிந்து வீடுகளுக்கு கிளம்பத் தயாராக இருந்த அந்த 100 நாள் வேலைப் பெண்கள்.
மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், சோழவந்தான் அருகில், நாகமலை புல்லூத்து என்ற இடத்தில், ஆடம்பரமாக காட்சியளிக்கும் அக்ஷயா தொண்டு நிறுவனத்தி லிருந்து கூப்பிடு தூரத்தில், 5.6.14 வியாழன் மாலை 4 மணிக்கு நடந்தது இந்தச் சம்பவம். அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்த பெண்கள் அனைவரும் பக்கத்தில் உள்ள கொடிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
அக்ஷயாவில் இருந்து ஊர் தப்பிவந்த ஆயிஷா என்ற அந்த இளம்பெண்ணை தங்களோடு அழைத்துச் சென்று, சேலை ரவிக்கை அணியவைத்து, சாப்பாடு கொடுத்து, கிராம நல அலுவலர் உதவியோடு, காவல்துறையினரிடம் ஒப்படைத்தவர்கள் கொடிமங்கலம் மக்கள்தான். கொடிமங்கலம் மக்களின் பாதுகாப்பில் இருந்த அந்தச் சிறுபொழுதில் ஆயிஷாவைச் சந்தித்தோம். எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தெளிந்த நீரோட்டம் போல பேசினார்.
அக்ஷயா ஆசிரமத்தில் நடக்கிறது சேவையோ தொண்டோ கிடையாது. அவங்க, அநாதைகளின், மன நிலை சரியற்றவர்களின் உடல் உறுப்புகளை வியாபாரம் செய்றாங்க. அங்கே இருக்கிற என்னை மாதிரி இளவயசுக் காரங்களை சுயமா யோசிக்க விடமாட்டாங்க. தினமும் மூணு தடவை போதை ஊசி போட்டு மிதக்க விடுறாங்க. அசிங்கமா பேசுறதா நெனைக்காதீங்க. இப்ப ஏழெட்டு நாளா எனக்கு உமட்டுது. வாமிட் வர்ற மாதிரி இருக்கு. கர்ப்பமா இருக்கிறேனோ அப்படின்னு எனக்கே சந்தேகமா இருக்கு.
ஆசிரமத்தில் பாதி சாமத்தில பெண்கள் அலறுவாங்க. பயமாயிருக்கும். எழுந்து ஜன்னல் வழியா பார்ப்பேன்… அடுத்த அறையில வீடியோ கேமராவால் ஆபாச படம் எடுக்கிறது தெரியும். இல்லைனா நிர்வாணமா ஆடச் சொல்லி படம் எடுப்பாங்க. டிரஸ்ஸை கழட்ட மறுக்கிற பெண்களை ரெண்டு மூணு தடியனுங்க அடிப்பானுங்க. அந்தப் பொண்ணுங்க அடிதாங்க முடியாம கதறுங்க. இதெல்லாம் மிட் நைட்லதான் நடக்கும்…
அப்புறம், வாரம் ஒருமுறையாவது யாராவது ரெண்டு ஃபாரீன்காரங்களை ரமேஷ்ன்ற தடியன் கூட்டிட்டு வருவான். அந்த வெளிநாட்டுக்காரங்க முன்னாடி எங்களை வரிசையா நிக்கவச்சு பார்ப்பாங்க. எங்கள்ல இருந்து ரெண்டு மூணு பேரை அவங்க காட்டிட்டு போவாங்க. அடுத்த ரெண்டுநாள்ல, அவங்க காட்ன ரெண்டு மூணுபேரும் பிணமாயிடு வாங்க. சாகிறவங்க எல்லாரும் நைட்லதான் சாவாங்க. அது சாவு இல்லை, கொலை. மயக்க மருந்து கூட கொடுக்காம உறுப்புகளை அறுத்தெடுக்கிற கொலை. ராத்திரி யோட ராத்திரியா புதைச்சிடுவாங்க. இல்லைனா எரிச்சிடுவாங்க.
4- ஆம் தேதி புதன்கிழமை பகல்ல ஒரு வெள்ளைக்காரனை கூட்டிட்டு வந்தான் ரமேஷ். அந்த வெள்ளையன் என்னை அடையாளம் காட்டிட்டுப் போனான். அப்பவே எனக்கு பயம் வந்திருச்சு. என்கூட இருந்த பொண்ணுங்க… “ஆயிஷா உனக்கு அஞ்சாம் நைட் ஆபரேஷனாம்’னு சொல்லிக் கட்டிப்பிடிச்சு அழுதாங்க. அதான்… அதாண்ணே அஞ்சாம் தேதி சாயந்தரமே… குளிக்கிறதாச் சொல்லிட்டு, யூனிபார்மை கழட்டிப் போட்டுட்டு, ஓடி வந்து இவங்க கிட்ட அடைக்கலம் புகுந்தேன்!” குளமான கண்களைத் துடைத்தபடி சொல்லி முடித்தார் ஆயிஷா.
ஆயிஷா சொல்வது எந்த அளவுக்கு உண்மை? கொடிமங்கலம் ராஜாமணியிடம் கேட்டோம்.
“நிச்சயமாக சொல்றேன். அக்ஷயா ஆசிரமத்தில் ரொம்ப தப்பு நடக்குது. மதுரை பெரியாஸ்பத்திரியில் கூட இவ்வளவு பேர் சாகிறதில்லை. மாதத்துக்கு கொறஞ்சது இருபது இருபத்தஞ்சு பிணங்களை நாகமலை சுடுகாட்ல எரிக்கிறாங்க. அல்லது புதைக்கிறாங்க. எஸ்.எஸ்.காலனியில சாதாரணமா இருந்த ஒரு ஆளு… 2 கோடிக்கு நிலம் வாங்கி கோடிக்கணக்கில் செலவழிச்சு கட்டடங் களை கட்டி, வர்றவன் போறவனுக்கெல்லாம் ஆயிரம் பத்தாயிரம் லட்சம்னு வாரிக் குடுக்கிறதா சொல்றாங்க. நிச்சயமா அங்கே பெரிய கிரைம் நடக்குது!” வியப்பின்றிச் சொன்னார் ராஜாமணி.
ஆயிஷாவுக்கு சேலை ரவிக்கை கொடுத்த லீலாவதியிடம் கேட்டோம். “பாவம்ங்க இந்த ஆயிஷா… அது கத்திக்கினு ஓடியாரதைப் பார்த்தப்போ எங்க ஈரக்கொலையே ஆடிப்போச்சு. பாதிச் சாமத்தில அந்த ஆசிரமத்தில பொண் ணுக அலறுற சத்தம் நல்லா கேக்கும். ஆனால் நாம யாரும் அதுக்குள்ள போகவே முடி யாது. இப்பக் கூட பாருங்க. போலீஸ் ஆபீசர்களைக் கூட உள்ளே விடமாட்டேன்றாங்க. அந்த ஆசிரமக்காரங்களைப் பார்த்து போலீசே பயப்படுதே!” என்றார் லீலாவதி.
மாதம் இருபது முப்பது பிணங்கள் எரிக்கப்படுவது உண்மையா?
பொறுப்பு வி.ஏ.ஓ.வாக இருக்கும் திரவியத்திடம் கேட்டோம்.
“பழைய வி.ஏ.ஓ.வும், உதவியாளரும் கூட இதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க. கடந்த 6 மாதத்திற்குள் 50-க்கும் அதிகமான சாவுகள் என்று சொன்னார்கள். ரொம்ப டவுட்டாதான் இருக்கு. போலீஸ்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கணும். பணத்தால் எதையும் சரிக்கட்டிவிட முடியும்னு அந்த நிர்வாகம் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்” என்றார் அவர்.
அக்கம் பக்கக் கிராமங்களின் மக்களும், ஆயிஷாவும் சொல்லும் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமந்து கொண்டு நிற்கும் அக்ஷயா தொண்டு நிறுவனத் துக்குச் சென்றோம்.
டி.எஸ்.பி. சாந்த சொரூபனையே உள்ளே அனுமதிக்க முடியாதென்று வெளியே நிறுத்தி வைத்திருந்தார்கள். கிராம மக்களின் ஆவேசத்தை தாங்க முடியாமல் தான் கடைசியில் மெயின் அலுவலகம் வரை போகலாம் எனத் திறந்து விட்டார்கள்.
அக்ஷயா ஓனர் திருமதி வித்யா கிருஷ்ணய்யரை சந்தித்தோம்.
“அநாதைகளை, மனநலமற்றவர்களை பாதுகாக்கும் தொண்டு நிறுவனம் இது. இந்த ஆயிஷாவும் கொடிமங்கலம் மக்களும் எங்க மீது ஏன் இப்படி அபாண்டமா சொல்றாங்களோ தெரியலை. அனாதைப் பிணங் களை வி.ஏ.ஓ.விடமும் தலையாரியிடமும் சொல் லிட்டுதான் அடக்கம் செய்றோம். மற்றபடி கிட்னியெல்லாம் திருடமாட்டோம்ங்க!” சற்றே எரிச்சலோடு சொன்னார்.
அதன்பிறகு, அந்த அக்ஷயாவுக் குள் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. சாந்த சொரூபன், உசிலம்பட்டி டி.எஸ்.பி. சுரேஷ், ஆர்.டி.ஓ. ஆறுமுக நைனார், சப்-கலெக்டர் ஆர்த்தி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, வட்டாட்சியர் முத்துராமலிங்கம் என அதிகாரிகள் பலர் சென்று வந்தார்கள். மற்றவர்கள் எல்லாரும் வாய்திறக்க மறுத்தார்கள்.
ஆர்.டிஓ. ஆறுமுக நைனார் மட்டும் நம்மிடம், “துறை ரீதியான விசாரணை தொடருது. போஸ்ட்மார்ட் டம் செய்யாமல், போலீசுக்கு தெரி விக்காமல் 15 சடலங்களை எரித்ததை ஒப்புக்கொண்டார்கள். மற்றபடி போலீஸ்தான் விசாரிக்க வேண்டும்!” என்றார்.
அக்ஷயா தொண்டு நிறுவனத் திற்குள் போலீசார் போவார்களா? “இன்னமும் எஃப்.ஐ.ஆர். போடலீங்க. கேட்டம்னா… அந்தப் பைத்தியக்காரி சொல்றதை எப்படி நம்புறதுனு கேக்குறாக. யாரோ ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியோட சப்போர்ட் அக்ஷயா கிருஷ்ணய்யருக்கு இருக்கு. அது யாருனு தெரியலையே!” என்கிறார்கள் கவலையோடு கொடிமங்கலம் மக்கள்.

கயமையாளர்களாகும் கடமையாளர்கள்!

இவர் மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில், ஆதரவற்று தெருவில் கிடக்கும் நபர்களுக்கு உணவு வழங்கி வந்தவர். உணவு வழங்குவது ஒகே. ஆனால், அதற்கு முன்பாக அவர்களின் காலை தொட்டு கும்பிடுவது உள்ளிட்ட அனைத்து பில்டப்பும் தேவையற்றது என நம்பினேன்.
அதெல்லாம் எதற்காக (உன்னை கொல்லப்போகும் பாவத்திற்காக என்னை மன்னித்துவிடு) என்பது இப்போது புரிந்துவிட்டது.
சாலையோரங்களில் வசித்தபோது கூட இறக்காத அளவிற்கு, ஆசிரமத்தில் ஒரு மாதத்திற்கு இவ்வளவுபேர் இறந்தால், அது எப்படி ஆதரவற்றோருக்கு உணவளிப்பதும், இறப்பதும் ஆகும். அப்பெண் சொல்வதுபோல, கொலைதானே என்கிற சந்தேகம் எழாமலில்லை.
இப்படி துணிந்து குற்றம் புரிபவர்களுக்கு பின்னால், யாரோவொரு உயர்மட்ட அரசூழியர் இருப்பார் என்பது மட்டும் உறுதி! 2010 ஆம் ஆண்டில், இவரை சி.என்.என் நிறுவனம் கதாநாயகனக தேர்ந்தெடுத்தது. இவர் விக்கிபீடியாவில் வேறு இடம் பிடித்துவிட்டார்.
நக்கீரனலிருந்து ……
உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல், பிறந்த மேனியோடு, கதறியபடி ஓடி வந்த அந்த இளம்பெண்ணை முதலில் பார்த்தவர்கள் நூறு நாள் வேலை செய்யும் பெண்கள்தான்.
அக்ஷயா ஆசிரமத்தின் காம்பவுண்டின் சுவரை எகிறிக்குதித்து ஓடி வந்ததை அவர்கள் பார்த்தார்கள்.. ‘‘நான் மெண்டல் இல்லை. மத்த பொண்ணுங்களை கொலை செஞ்ச மாதிரி என்னையும் சாகடிக்கிறதுக்கு டைம் பிக்ஸ் பண்ணிட்டாங்க. ப்ளீஸ் அக்கா..அம்மா.. என்னைக் காப்பாத்தி ஒங்க வீட்டுக்கு கூட்டிப் போங்க.”
“இந்தாம்மா.. முதல்ல இதை உடம்புல சுத்திக்க” தங்கள் தலையில் சுற்றியிருந்த சாயத் துண்டுகளை அந்த இளம் பெண்ணுக்கு கொடுத்து நிர்வாணத்தை மறைக்க வைத்தார் கள், அன்றைய வேலை முடிந்து வீடுகளுக்கு கிளம்பத் தயாராக இருந்த அந்த 100 நாள் வேலைப் பெண்கள்.
மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், சோழவந்தான் அருகில், நாகமலை புல்லூத்து என்ற இடத்தில், ஆடம்பரமாக காட்சியளிக்கும் அக்ஷயா தொண்டு நிறுவனத்தி லிருந்து கூப்பிடு தூரத்தில், 5.6.14 வியாழன் மாலை 4 மணிக்கு நடந்தது இந்தச் சம்பவம். அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்த பெண்கள் அனைவரும் பக்கத்தில் உள்ள கொடிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
அக்ஷயாவில் இருந்து ஊர் தப்பிவந்த ஆயிஷா என்ற அந்த இளம்பெண்ணை தங்களோடு அழைத்துச் சென்று, சேலை ரவிக்கை அணியவைத்து, சாப்பாடு கொடுத்து, கிராம நல அலுவலர் உதவியோடு, காவல்துறையினரிடம் ஒப்படைத்தவர்கள் கொடிமங்கலம் மக்கள்தான். கொடிமங்கலம் மக்களின் பாதுகாப்பில் இருந்த அந்தச் சிறுபொழுதில் ஆயிஷாவைச் சந்தித்தோம். எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தெளிந்த நீரோட்டம் போல பேசினார்.
அக்ஷயா ஆசிரமத்தில் நடக்கிறது சேவையோ தொண்டோ கிடையாது. அவங்க, அநாதைகளின், மன நிலை சரியற்றவர்களின் உடல் உறுப்புகளை வியாபாரம் செய்றாங்க. அங்கே இருக்கிற என்னை மாதிரி இளவயசுக் காரங்களை சுயமா யோசிக்க விடமாட்டாங்க. தினமும் மூணு தடவை போதை ஊசி போட்டு மிதக்க விடுறாங்க. அசிங்கமா பேசுறதா நெனைக்காதீங்க. இப்ப ஏழெட்டு நாளா எனக்கு உமட்டுது. வாமிட் வர்ற மாதிரி இருக்கு. கர்ப்பமா இருக்கிறேனோ அப்படின்னு எனக்கே சந்தேகமா இருக்கு.
ஆசிரமத்தில் பாதி சாமத்தில பெண்கள் அலறுவாங்க. பயமாயிருக்கும். எழுந்து ஜன்னல் வழியா பார்ப்பேன்… அடுத்த அறையில வீடியோ கேமராவால் ஆபாச படம் எடுக்கிறது தெரியும். இல்லைனா நிர்வாணமா ஆடச் சொல்லி படம் எடுப்பாங்க. டிரஸ்ஸை கழட்ட மறுக்கிற பெண்களை ரெண்டு மூணு தடியனுங்க அடிப்பானுங்க. அந்தப் பொண்ணுங்க அடிதாங்க முடியாம கதறுங்க. இதெல்லாம் மிட் நைட்லதான் நடக்கும்…
அப்புறம், வாரம் ஒருமுறையாவது யாராவது ரெண்டு ஃபாரீன்காரங்களை ரமேஷ்ன்ற தடியன் கூட்டிட்டு வருவான். அந்த வெளிநாட்டுக்காரங்க முன்னாடி எங்களை வரிசையா நிக்கவச்சு பார்ப்பாங்க. எங்கள்ல இருந்து ரெண்டு மூணு பேரை அவங்க காட்டிட்டு போவாங்க. அடுத்த ரெண்டுநாள்ல, அவங்க காட்ன ரெண்டு மூணுபேரும் பிணமாயிடு வாங்க. சாகிறவங்க எல்லாரும் நைட்லதான் சாவாங்க. அது சாவு இல்லை, கொலை. மயக்க மருந்து கூட கொடுக்காம உறுப்புகளை அறுத்தெடுக்கிற கொலை. ராத்திரி யோட ராத்திரியா புதைச்சிடுவாங்க. இல்லைனா எரிச்சிடுவாங்க.
4- ஆம் தேதி புதன்கிழமை பகல்ல ஒரு வெள்ளைக்காரனை கூட்டிட்டு வந்தான் ரமேஷ். அந்த வெள்ளையன் என்னை அடையாளம் காட்டிட்டுப் போனான். அப்பவே எனக்கு பயம் வந்திருச்சு. என்கூட இருந்த பொண்ணுங்க… “ஆயிஷா உனக்கு அஞ்சாம் நைட் ஆபரேஷனாம்’னு சொல்லிக் கட்டிப்பிடிச்சு அழுதாங்க. அதான்… அதாண்ணே அஞ்சாம் தேதி சாயந்தரமே… குளிக்கிறதாச் சொல்லிட்டு, யூனிபார்மை கழட்டிப் போட்டுட்டு, ஓடி வந்து இவங்க கிட்ட அடைக்கலம் புகுந்தேன்!” குளமான கண்களைத் துடைத்தபடி சொல்லி முடித்தார் ஆயிஷா.
ஆயிஷா சொல்வது எந்த அளவுக்கு உண்மை? கொடிமங்கலம் ராஜாமணியிடம் கேட்டோம்.
“நிச்சயமாக சொல்றேன். அக்ஷயா ஆசிரமத்தில் ரொம்ப தப்பு நடக்குது. மதுரை பெரியாஸ்பத்திரியில் கூட இவ்வளவு பேர் சாகிறதில்லை. மாதத்துக்கு கொறஞ்சது இருபது இருபத்தஞ்சு பிணங்களை நாகமலை சுடுகாட்ல எரிக்கிறாங்க. அல்லது புதைக்கிறாங்க. எஸ்.எஸ்.காலனியில சாதாரணமா இருந்த ஒரு ஆளு… 2 கோடிக்கு நிலம் வாங்கி கோடிக்கணக்கில் செலவழிச்சு கட்டடங் களை கட்டி, வர்றவன் போறவனுக்கெல்லாம் ஆயிரம் பத்தாயிரம் லட்சம்னு வாரிக் குடுக்கிறதா சொல்றாங்க. நிச்சயமா அங்கே பெரிய கிரைம் நடக்குது!” வியப்பின்றிச் சொன்னார் ராஜாமணி.
ஆயிஷாவுக்கு சேலை ரவிக்கை கொடுத்த லீலாவதியிடம் கேட்டோம். “பாவம்ங்க இந்த ஆயிஷா… அது கத்திக்கினு ஓடியாரதைப் பார்த்தப்போ எங்க ஈரக்கொலையே ஆடிப்போச்சு. பாதிச் சாமத்தில அந்த ஆசிரமத்தில பொண் ணுக அலறுற சத்தம் நல்லா கேக்கும். ஆனால் நாம யாரும் அதுக்குள்ள போகவே முடி யாது. இப்பக் கூட பாருங்க. போலீஸ் ஆபீசர்களைக் கூட உள்ளே விடமாட்டேன்றாங்க. அந்த ஆசிரமக்காரங்களைப் பார்த்து போலீசே பயப்படுதே!” என்றார் லீலாவதி.
மாதம் இருபது முப்பது பிணங்கள் எரிக்கப்படுவது உண்மையா?
பொறுப்பு வி.ஏ.ஓ.வாக இருக்கும் திரவியத்திடம் கேட்டோம்.
“பழைய வி.ஏ.ஓ.வும், உதவியாளரும் கூட இதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க. கடந்த 6 மாதத்திற்குள் 50-க்கும் அதிகமான சாவுகள் என்று சொன்னார்கள். ரொம்ப டவுட்டாதான் இருக்கு. போலீஸ்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கணும். பணத்தால் எதையும் சரிக்கட்டிவிட முடியும்னு அந்த நிர்வாகம் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்” என்றார் அவர்.
அக்கம் பக்கக் கிராமங்களின் மக்களும், ஆயிஷாவும் சொல்லும் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமந்து கொண்டு நிற்கும் அக்ஷயா தொண்டு நிறுவனத் துக்குச் சென்றோம்.
டி.எஸ்.பி. சாந்த சொரூபனையே உள்ளே அனுமதிக்க முடியாதென்று வெளியே நிறுத்தி வைத்திருந்தார்கள். கிராம மக்களின் ஆவேசத்தை தாங்க முடியாமல் தான் கடைசியில் மெயின் அலுவலகம் வரை போகலாம் எனத் திறந்து விட்டார்கள்.
அக்ஷயா ஓனர் திருமதி வித்யா கிருஷ்ணய்யரை சந்தித்தோம்.
“அநாதைகளை, மனநலமற்றவர்களை பாதுகாக்கும் தொண்டு நிறுவனம் இது. இந்த ஆயிஷாவும் கொடிமங்கலம் மக்களும் எங்க மீது ஏன் இப்படி அபாண்டமா சொல்றாங்களோ தெரியலை. அனாதைப் பிணங் களை வி.ஏ.ஓ.விடமும் தலையாரியிடமும் சொல் லிட்டுதான் அடக்கம் செய்றோம். மற்றபடி கிட்னியெல்லாம் திருடமாட்டோம்ங்க!” சற்றே எரிச்சலோடு சொன்னார்.
அதன்பிறகு, அந்த அக்ஷயாவுக் குள் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. சாந்த சொரூபன், உசிலம்பட்டி டி.எஸ்.பி. சுரேஷ், ஆர்.டி.ஓ. ஆறுமுக நைனார், சப்-கலெக்டர் ஆர்த்தி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, வட்டாட்சியர் முத்துராமலிங்கம் என அதிகாரிகள் பலர் சென்று வந்தார்கள். மற்றவர்கள் எல்லாரும் வாய்திறக்க மறுத்தார்கள்.
ஆர்.டிஓ. ஆறுமுக நைனார் மட்டும் நம்மிடம், “துறை ரீதியான விசாரணை தொடருது. போஸ்ட்மார்ட் டம் செய்யாமல், போலீசுக்கு தெரி விக்காமல் 15 சடலங்களை எரித்ததை ஒப்புக்கொண்டார்கள். மற்றபடி போலீஸ்தான் விசாரிக்க வேண்டும்!” என்றார்.
அக்ஷயா தொண்டு நிறுவனத் திற்குள் போலீசார் போவார்களா? “இன்னமும் எஃப்.ஐ.ஆர். போடலீங்க. கேட்டம்னா… அந்தப் பைத்தியக்காரி சொல்றதை எப்படி நம்புறதுனு கேக்குறாக. யாரோ ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியோட சப்போர்ட் அக்ஷயா கிருஷ்ணய்யருக்கு இருக்கு. அது யாருனு தெரியலையே!” என்கிறார்கள் கவலையோடு கொடிமங்கலம் மக்கள்.

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Blog Archive

Followers

 photo Animation4.gif
Related Posts Plugin for WordPress, Blogger...